×

கொரோனா நிதிக்கும் ஊரடங்கால்  பாதிக்கப்பட்டுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கும் காஜல் அகர்வால் 6 லட்சம் நிதியுதவி!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குநர்கள் வேளை சோற்றுக்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு தங்களாலான உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் நடிகை, நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர்.
 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் காரணமாக  பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குநர்கள் வேளை சோற்றுக்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு தங்களாலான உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் நடிகை, நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இந்ந்லையில் நடிகை காஜல் அகர்வால், கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு 2 லட்சமும், தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு 2 லட்சமும் நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் பிரதமரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சமும், மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சமும் வழங்கியுள்ளார். முன்னதாக நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு லட்சமும், நயன் தாரா 20 லட்சமும் கொடுத்து உதவியுள்ளனர்.