×

கை,கால் நல்ல தானே இருக்கு: விஜய் பட நடிகையை விளாசிய பிரபல நடிகர்!

விஜய் பட நடிகை விஜயலட்சுமியை கையும், காலும் நன்றாக தானே இருக்கிறது என்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கடுமையாக விளாசியுள்ளார். சென்னை: விஜய் பட நடிகை விஜயலட்சுமியை கையும், காலும் நன்றாகத் தானே இருக்கிறது என்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் கடுமையாக விளாசியுள்ளார். தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மிசைய முறுக்கு போன்ற சில படங்களில் நடித்திருந்தார். அதுபோக கன்னட படங்கள் மற்றும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து சமீப காலமாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை
 

விஜய் பட நடிகை விஜயலட்சுமியை கையும், காலும் நன்றாக தானே இருக்கிறது என்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கடுமையாக விளாசியுள்ளார்.

சென்னை: விஜய் பட நடிகை விஜயலட்சுமியை கையும், காலும் நன்றாகத் தானே இருக்கிறது என்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் கடுமையாக விளாசியுள்ளார்.

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மிசைய முறுக்கு போன்ற சில படங்களில் நடித்திருந்தார். அதுபோக கன்னட படங்கள் மற்றும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அதையடுத்து சமீப காலமாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு உதவும்படி திரையுலகத்தினரிடம் உதவியும் கேட்டு வந்தார். உதவி செய்கிறேன் என கூறிய கன்னட நடிகர் ரவி பிரகாஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையில் சிவராஜ் குமார், புனித் ராஜ்குமார் எனக்கு உதவி செய்யவில்லை என்று கூறி விஜயலட்சுமி  வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது குறித்து சிவராஜ் குமார் கூறியதாவது,’ விஜயலட்சுமிக்குத் தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருக்க முடியாது. அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார். ஒருவர் சொல்வது எல்லாம் உண்மையா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், உடலில் குறையுள்ளவர்கள் கூட கடினமாக உழைத்து வாழ்கிறார்கள். அப்படி இருக்கும்போது நல்ல கை, கால்கள் இருப்பவரால் ஏன் தன்னை பார்த்துக்கொள்ள முடியவில்லை? முடியாத ஒருவரைப் பார்த்தால் உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வு உள்ளிருந்து வர வேண்டும்’ என்று கூறினார். 

இதையும் படிங்க: சிரஞ்சீவி குடும்பத்திற்கு மாப்பிளையாகும் விஜய் தேவரகொண்டா?