×

கேன்சர் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய சோனாலி பிந்த்ரே!

கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நடிகை சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பியுள்ளார். மும்பை: கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நடிகை சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பியுள்ளார். ‘காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தயாரிப்பாளர் கோல்டி பெல்லை திருமணம் செய்துக் கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டார். இந்நிலையில், சமீபத்தில் இவர் கேன்சர் நோயால்
 

கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நடிகை சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பியுள்ளார்.

மும்பை: கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நடிகை சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பியுள்ளார்.

காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தயாரிப்பாளர் கோல்டி பெல்லை திருமணம் செய்துக் கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறியப்பட்டு நியூயார்க் நகரில் கேன்சர் சிகிச்சையாக கீமோ தெரப்பி செய்து வந்தார். மெட்டாஸ்டேட்டிக் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் சோனாலி பகிர்ந்தது, அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், அனைவரது பிரார்த்தனையுடனும், மன வலிமையுடனும் சிகிச்சை பெற்று வந்த சோனாலி, தற்போது முழுமையாக குணமடைந்து நாடு திரும்பியுள்ளார்.

நடிகை சோனாலி, இந்தியா திரும்பியது குறித்து பேசிய அவரது கணவர் கோல்டி பெல், சோனாலி நலமாக இருக்கிறார். தற்போதைக்கு அவரது சிகிச்சை முடிவடைந்தது. கேன்சர் நோய் திரும்பி வர வாய்ப்புள்ளதால், அடிக்கடி அமெரிக்காவிற்கு செக்-அப்பிற்கு செல்ல வேண்டும் என்றார்.

மும்பைக்கு வருவதற்கு முன் ஏர்ப்போர்ட்டில் இருக்கும் புகைப்படத்துடன் உருக்கமான பதிவை சோனாலி பகிர்ந்திருந்தார். அதில், என் இதயம் இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டேன். இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை எனிலும் முயற்சிக்கிறேன். எனது நண்பர்கள், குடும்பத்தை காண ஆவலாக இருக்கிறேன். கேன்சர் உடனான எனது போராட்டம் முழுவதுமாக தீரவில்லை என்றாலும், சிறிய இடைவெளி கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி’ என்று பகிர்ந்துள்ளார்.