×

குடிபோதையால் நடிகை நமீதா படத்திலிருந்து நீக்கப்பட்ட இயக்குநர்!

நடிகை நமீதா நடிக்கும் அகம்பாவம் படத்தின் இயக்குநர் திடீரென படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். சென்னை: நடிகை நமீதா நடிக்கும் அகம்பாவம் படத்தின் இயக்குநர் திடீரென படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அகம்பாவம்’. திருமணத்திற்குப் பிறகு நடிகை நமீதா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தின் கதைக்களமானது அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்
 

நடிகை நமீதா நடிக்கும் அகம்பாவம் படத்தின் இயக்குநர் திடீரென படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

சென்னை: நடிகை நமீதா நடிக்கும் அகம்பாவம் படத்தின் இயக்குநர் திடீரென படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அகம்பாவம்’. திருமணத்திற்குப் பிறகு நடிகை நமீதா இப்படத்தில்  கதாநாயகியாக நடிக்கிறார்.

பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு  இப்படத்தின் கதைக்களமானது அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வில்லனாக நடித்துத் தயாரித்தும் வருகிறார் வாராகி. 

இந்நிலையில் ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் தற்போது படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் வாராகி, ‘இயக்குநர் ஸ்ரீமகேஷ், பட வாய்ப்பு இல்லாமல் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். அவருடைய வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த, இப்படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தேன். குடிக்காமல் படப்பிடிப்பை முடித்துத் தரும்படி கேட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்தேன். ஆனால், அவர் ஒப்பந்தத்தை மீறி தினமும் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இதனால், இந்தப் படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டேன். இதனால் நானே இப்படத்தை இயக்கவும் முடிவு செய்துவிட்டேன்’ என்றார்.