×

கீமோதெரப்பிக்கு பின் சோனாலி பிந்த்ரேவுக்கு வந்த சோதனை..!

கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டன்: கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ‘காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தயாரிப்பாளர் கோல்டி பெல்லை திருமணம் செய்துக் கொண்ட பிறகு நடிப்புக்கு
 

கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

லண்டன்: கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தயாரிப்பாளர் கோல்டி பெல்லை திருமணம் செய்துக் கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறியப்பட்டு நியூயார்க் நகரில் கீமோ தெரப்பி செய்து வருகிறார். மெட்டாஸ்டேட்டிக் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் சோனாலி பகிர்ந்தது, அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், அனைவரது பிரார்த்தனையுடனும், மன வலிமையுடனும் சிகிச்சை பெற்று வருகிறார்.

கீமோவில் உள்ள சோனாலி பிந்த்ரேவுக்கு அதன் விளைவாக கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட சோனாலி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில், கீமோதெரப்பியால் தனக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டதால், சரியாக படிக்க முடியவில்லை. தற்போது அதற்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் புத்தகம் படிக்க ஆவலுடன் இருக்கிறேன். நீங்களும் என்னுடன் இணைந்து படிக்க தயாரா’ என்று பகிர்ந்துள்ளார்.