×

காமெடி நடிகர் யோகி பாபுவின் இரவு நேர கதைகள் ரொம்ம டெர்ரரா இருக்கும் போலருக்கே !?

நாளது தேதிகளின் படி நிஜமாகவே ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர் யோகிபாபு மட்டும்தான். சென்னை: நாளது தேதிகளின் படி நிஜமாகவே ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர் யோகிபாபு மட்டும்தான்.எவ்வளவு சம்பளமும் கொடுக்க தயாரிப்பாளர்கள் ரெடி.ஆனால் தேதி கொடுக்க முடியாமல் திண்டாடிக்கிறார் பாவம். யோகிபாபு அறிமுகமானது சுப்ரமண்ய சிவா இயக்கத்தில் அமீர் நடித்த யோகி படம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.அறிமுகப் படுத்தின இயக்குனர் தற்போது இயக்கி முடித்திருக்கும் ‘வெள்ளை யனை’படத்திற்கே கேட்டு இரண்டு மாதம் கழித்துதான் தேதி கொடுத்தார்
 

நாளது தேதிகளின் படி நிஜமாகவே ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர் யோகிபாபு மட்டும்தான்.

சென்னை: நாளது தேதிகளின் படி நிஜமாகவே ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர் யோகிபாபு மட்டும்தான்.எவ்வளவு சம்பளமும் கொடுக்க தயாரிப்பாளர்கள் ரெடி.ஆனால் தேதி கொடுக்க முடியாமல் திண்டாடிக்கிறார் பாவம்.

யோகிபாபு அறிமுகமானது சுப்ரமண்ய சிவா இயக்கத்தில் அமீர் நடித்த யோகி படம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.அறிமுகப் படுத்தின இயக்குனர் தற்போது இயக்கி முடித்திருக்கும் ‘வெள்ளை யனை’படத்திற்கே கேட்டு இரண்டு மாதம் கழித்துதான் தேதி கொடுத்தார் என்றால்,எவ்வளவு பிசி என்று நீங்களே கணக்கு போட்டுக்கலாம்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் யோகிபாபுவின் கால்ஷீட் வாங்க இரண்டு இயக்குனர்கள் போட்ட திட்டம் இருக்கே அதுதான் செம மேட்டர்.இரண்டு படங்களுமே ஒரு இரவில் நடக்கிற மாதிரியான கதை.

‘டார்லிங்,’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ இரண்டு படங்களையும் இயக்கியுள்ள சாம் ஆண்டன் இயக்கும் படம் ‘கூர்க்கா’.இந்தப் படத்தின் மொத்தக்கதையும் ஒரு மாலில்,ஒரு இரவுக்குள் நடந்து அதிகாலையில் முடிகிற கதை.

இன்னொரு படம் புவன் R நல்லான் இயக்கும் ‘ஜாம்பி’படம்.காமெடி கலந்த த்ரில்லர் படம்.சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈ.சி.ஆர் ரோட்டில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள்,ஓரு இரவில் நடப்பது போல் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு இயக்குனர்களும்,பகலில் வேறொரு படத்தில் நடிக்கும் யோகிபாபு இரவில் இந்தப் படங்கள் என்று இரவு பகல் தூங்காமல் நடித்துக்கொண்டிருக்கிறார். காமெடிதான்னாலும் அதுலயும் எவ்வளவு கஷ்டம் இருக்கு பாருங்க!