×

காதல் மனைவியுடன் நேரம் செலவிட வாடகை வீட்டுக்கு சென்ற ரன்வீர் சிங்… வாடகை எவ்வளவு தெரியுமா?

திருமணத்தைத் தொடர்ந்து இருவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடிகை தீபிகா படுகோன் – நடிகர் ரன்வீர் சிங் இருவரும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடி. இவர்கள் கடந்த நவம்பர் மாதம் இத்தாலியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தைத் தொடர்ந்து இருவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் தீபிகா படுகோன் மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள Beaumonde Towers என்ற அபார்ட்மென்டில் ஒரு
 

திருமணத்தைத் தொடர்ந்து இருவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

நடிகை தீபிகா படுகோன் – நடிகர் ரன்வீர் சிங் இருவரும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடி. இவர்கள் கடந்த நவம்பர் மாதம் இத்தாலியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தைத் தொடர்ந்து இருவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

இந்நிலையில் தீபிகா படுகோன் மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள Beaumonde Towers என்ற அபார்ட்மென்டில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளனராம். அதன் ஒரு மாத வாடகை மட்டும் 7.25 லட்சம் ருபாய் என்று தெரிகிறது.  4 பெட்ரூம் கொண்ட அந்த வீட்டை 3 வருடத்திற்கு இந்த  ஜோடி வாடகைக்கு எடுத்துள்ளதாம். முதல் இரண்டு வருடங்களுக்கு மாத வாடகை  7.25 லட்சம் ரூபாயும், அடுத்த ஒரு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாயும் மாத வாடகையாகத் தரவேண்டும் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக அதே அபார்ட்மெண்டில் தீபிகா கடந்த  2010 ஆம் ஆண்டு ரூ. 16 கோடி கொடுத்து ஒரு வாங்கியது  குறிப்பிடத்தக்கது.தீபிகா படுகோன் ஷூட்டிங் முடிந்து தனது சொந்த வீட்டில் தங்கிவிடுவதால் ரன்வீர் சிங்கால் தீபிகாவுடன் நேரம் செலவிட முடியாமல் போய்விடுகிறதாம். அதனால் தான் இந்த முடிவு என்று பாலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.