×

காதலில் விழுந்த நடிகை டாப்ஸி: இவரை தான் திருமணம் செய்ய போகிறாராம்!?

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டாப்ஸியிடம் வருண் தவான், அபிஷேக் பச்சன், விக்கி கௌசல் மூவரில் யாரைத் திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நடிகை டாப்ஸி பாலிவுட் நடிகர் ஒருவரை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார். தமிழில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் அப்படத்தை தொடர்ந்து ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து
 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  டாப்ஸியிடம் வருண் தவான், அபிஷேக் பச்சன், விக்கி கௌசல்  மூவரில் யாரைத்  திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்

நடிகை டாப்ஸி பாலிவுட் நடிகர் ஒருவரை  திருமணம் செய்ய ஆசைப்படுவதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

தமிழில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் அப்படத்தை தொடர்ந்து ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து இவரது படங்கள் தமிழில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் பாலிவுட் பக்கம்  சென்ற டாப்ஸி பேபி, பிங்க் போன்ற படங்களால்  நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இவர் நடிகர் விக்கி கௌசலுடன் இணைந்து Manmarziyaan படத்தில் இணைந்து நடித்துள்ளார். அப்படம் கடந்த 2018ம் வருடம் வெளியாகப்  பாலிவுட்டில் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் நண்பர்களான டாப்ஸியும் விக்கி கௌசலும் பொது இடங்களில் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  டாப்ஸியிடம் வருண் தவான், அபிஷேக் பச்சன், விக்கி கௌசல்  மூவரில் யாரைத்  திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்  விக்கி கௌசல் என்று பதிலளித்துள்ளார். முன்னதாக டாப்ஸி குறித்துப் பேசிய விக்கி கௌசல், ‘அவர் ஒரு நபர் மிகவும் வெளிப்படையானவர் மற்றும் ஒரு சிறந்த பேச்சாளர். நான் அவரது கேட்பவர் மட்டும் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே டாப்ஸியும் விக்கி கௌசலும் ஒன்றாகச் சுற்றி வரும் நிலையில் தனது திருமண ஆசை பற்றி டாப்ஸி வெளிப்படையாகக் கூறியிருப்பது அவர்கள்  காதலிப்பதை உறுதி செய்துள்ளதாக கிசுகிசுக்க படுகிறது.