×

காணாமல் போன கமலின் அட்வைஸ்: தாடி பாலாஜி-நித்யா மோதல்; கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

நடிகர் தாடி பாலாஜி மீது அவரின் மனைவி நித்யா மீண்டும் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார் சென்னை: நடிகர் தாடி பாலாஜி மீது அவரின் மனைவி நித்யா மீண்டும் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்களில் காமெடி நட்சத்திரமாக வலம்வந்தவர் தாடி பாலாஜி.பின்பு திரைப்படங்களில் அதிக அளவு கவனம் செலுத்தாவிட்டாலும், பிரபல சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடுவராகவும், இருந்து வருகிறார். நடிகர் பாலாஜி- நித்யாவுக்கும்
 

நடிகர் தாடி பாலாஜி மீது அவரின் மனைவி நித்யா மீண்டும்  காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்

சென்னை: நடிகர் தாடி பாலாஜி மீது அவரின் மனைவி நித்யா மீண்டும்  காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்களில் காமெடி நட்சத்திரமாக வலம்வந்தவர் தாடி பாலாஜி.பின்பு திரைப்படங்களில் அதிக அளவு கவனம் செலுத்தாவிட்டாலும், பிரபல சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடுவராகவும், இருந்து வருகிறார். 

நடிகர் பாலாஜி- நித்யாவுக்கும்  சில வருடங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசன் மற்றும் சிலர் இருவரையும் அழைத்து  சமாதானம் செய்ததை தொடர்ந்து இருவரும் மீண்டும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்று அனைவரும் நினைத்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நித்யா, மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாடி பாலாஜி மீது மீண்டும் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அதில், ‘பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

மேலும், ‘எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுவரும் நிலையில் குடிபோதையில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நடிகர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று புகாரில் நித்யா குறிப்பிட்டுள்ளார்.