×

கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை… கரை சேருமா ‘நாடோடிகள்-2’- ‘மாமனிதன்’ இரண்டும்!

நாடோடிகள் 2 ம் பாகத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் நந்தகோபால் படத்தை வெளியிட முடியாமல் சிக்கலில் இருக்கிறார். படத்தயாரிப்பு பத்து கோடி வரைக்கும் இழுத்து வந்து விட்டதாம் இதற்காக வாங்கிய கடன் அதற்கு வட்டி என்று இப்போது முப்பத்தைந்து கோடி வரை ஆகியிருப்பதாக தெரிகிறது. நாடோடிகள் 2 ம் பாகத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் நந்தகோபால் படத்தை வெளியிட முடியாமல் சிக்கலில் இருக்கிறார். படத்தயாரிப்பு பத்து கோடி வரைக்கும் இழுத்து வந்து விட்டதாம் இதற்காக வாங்கிய கடன்
 

நாடோடிகள் 2 ம் பாகத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் நந்தகோபால்    படத்தை வெளியிட முடியாமல் சிக்கலில் இருக்கிறார். படத்தயாரிப்பு பத்து கோடி வரைக்கும் இழுத்து வந்து விட்டதாம் இதற்காக வாங்கிய கடன் அதற்கு வட்டி என்று இப்போது முப்பத்தைந்து கோடி வரை ஆகியிருப்பதாக தெரிகிறது. 

நாடோடிகள் 2 ம் பாகத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் நந்தகோபால்    படத்தை வெளியிட முடியாமல் சிக்கலில் இருக்கிறார். படத்தயாரிப்பு பத்து கோடி வரைக்கும் இழுத்து வந்து விட்டதாம் இதற்காக வாங்கிய கடன் அதற்கு வட்டி என்று இப்போது முப்பத்தைந்து கோடி வரை ஆகியிருப்பதாக தெரிகிறது. 

இதனால் நாடோடிகள் 2 படம் வெளியாவதில் சிக்கல் வந்திருக்கிறது. இதே போல் படத்தை எடுத்து விட்டு கடனில் மூழ்கியிருக்கும் இன்னொரு தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் எடுத்திருக்கும் மாமனிதன் படத்தை சீனுராமசாமி இயக்கியிருந்தார். படத்திற்கு  இளையராஜாவும் யுவன்சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருந்தனர்.

  படம் சிறப்பாக வந்திருந்தாலும் இப்போது படத்தை வெளியிட முடியாமல் திணறுகிறாராம் யுவன். காரணம் வெளியில் அவர் இந்தப்பட்டதைக் காட்டி வாங்கியிருந்த கடன் தொகை 35 கோடியாக வளர்ந்து நிற்கிறதாம். இந்த களேபரத்தில் இயக்குநருக்கு கொடுக்கவேண்டிய நாற்பது லட்சம் சம்பளத்தையும் கொடுக்கவில்லையாம் யுவன். 

இதனால் அதிர்ப்தியடைந்த சீனு ராமசாமி இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். விரைவில் கொடுப்பதாக யுவன் சொன்ன பிறகு நடவடிக்கை எடுக்காமல் விட்டார்களாம். இப்போது முழுவதும் முடிந்த நிலையில் இருக்கும் படத்தை வெளியிடுவறகு முன்னால் தங்கள் கடனை செட்டில் செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறார்களாம் கடன் கொடுத்தவர்கள். என்ன செய்யப்போகிறாரோ யுவன்!?