கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம் சாண்டி – மாமியார் உருக்கம்!!
கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம் சாண்டி தான் என அவரின் மாமியார் தெரிவித்துள்ளார்.
கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம் சாண்டி தான் என அவரின் மாமியார் தெரிவித்துள்ளார்.
க்ளைமேக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3. கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி வெற்றிகரமாக 83 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.
8 போட்டியாளருடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த போட்டியிலிருந்து இன்று வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவிவருகிறது.
இன்றைய இரண்டாவது புரோமோவில், “கடவுள் கொடுத்த மிகப் பெரிய வரம் சாண்டி, அவருக்கு நான் மோமோபா என வைத்துள்ளேன். என் அம்மாவும் அப்பாவும் கலந்த உருவமாக தான் அவரை பார்க்கிறேன்…
இதுநாள் வரை ஒருநாள் கூட மாப்ளனு சொன்னது கிடையாது… இப்போது சொல்கிறேன் ஜெயித்துவிட்டு வரவும்” என நெகிழ்ச்சியாக பேசியது அரங்கத்திலிருந்தவர்களை கலங்க வைத்தது.