×

ஒருமாதமாக பின் தொடர்கிறார்: நடிகை பார்வதி போலீசில் பரபரப்பு புகார்!

நடிகைக்கு ஆதரவாக பேசியதால், திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழில் ‘பூ’, ‘மரியான்’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை பார்வதி. கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக பேசியதால், திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் நடிகை பார்வதி எர்ணாகுளம் குளம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் எர்ணாகுளத்தை சேர்ந்த வழக்கறிஞர் கிஷோர் என்பவர் ஒரு மாதமாக என்
 

நடிகைக்கு ஆதரவாக பேசியதால், திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தமிழில் ‘பூ’, ‘மரியான்’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை பார்வதி. கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக பேசியதால், திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில் நடிகை பார்வதி எர்ணாகுளம் குளம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் எர்ணாகுளத்தை  சேர்ந்த  வழக்கறிஞர் கிஷோர் என்பவர் ஒரு மாதமாக என் குடும்பத்தைப் பின்தொடர்கிறார். அத்துடன் என்னை பற்றி சமூகவலைதளத்தில்  அவதூறு பரப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கூறும் போலீசார்,  இரண்டு நாட்களுக்கு முன்பு பார்வதி புகார் அளித்துள்ளார். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.