×

ஒரு நாள் கதவு திறக்கும் – ஆஸ்கர் வாசலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் 

இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆஸ்கர் விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆஸ்கர் விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’. அதையடுத்து, தனது அடுத்த திரைப்படத்தின் பணிகளில் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆஸ்கர் விருது: இந்நிலையில், 91வது
 

இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆஸ்கர் விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆஸ்கர் விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’. அதையடுத்து, தனது அடுத்த திரைப்படத்தின் பணிகளில் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஆஸ்கர் விருது: 

இந்நிலையில், 91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’ என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பலரும்  வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

விக்னேஷ் சிவன் ட்வீட்:

அந்த வகையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘ஒரு நாள் – கதவு திறக்கும்… அருகில் இருப்பதே .. நமது வேலை.. இந்த ஆண்டு ஆஸ்கர் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

இயக்கம் மட்டுமின்றி அவ்வப்போது பாடல்களையும் எழுதி வரும் விக்னேஷ் சிவன், என்றாவது ஒருநாள் ஆஸ்கார் விருதினை பெறுவார் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.