×

ஒரு ஆணியும் **** முடியாது- விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. பிகில் பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து வருமான வரித்துறையின் சோதனை
 

விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

பிகில்  பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில்  கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விஜய்  ரசிகர்கள் டிவிட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக்கை  டிரெண்டாக்கி  அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து வருமான வரித்துறையின் சோதனை முடிந்து சில தினங்களிலேயே மீண்டும்  விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது அவரை காண பெருமளவு ரசிகர்கள் கூட்டமே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே விஜய் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. 

இந்நிலையில்  மதுரை சோழவந்தான் பகுதியில் விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்ட்டரை ஒட்டியுள்ளனர். அதில் “ஒரு ஆணியும் **** முடியாது.. தண்ணீல வளர்ந்த தவளை கூட்டம் அல்ல தளபதியின் அன்பால் வளர்ந்த பாசக்கூட்டம்” என குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் நீ வா தலைவா… வா என்றும் போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது