×

ஒத்த ஓட்ட போட்டுட்டு ஸ்ரீகாந்த் படுறபாடு இருக்கே அய்யயோ…..

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்காளர் பட்டியலில் பெயரில்லாமல் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்காளர் பட்டியலில் பெயரில்லாமல் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தென்சென்னை மக்களவை தேர்தலில் அனைத்து மக்கள், அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் ராஜேஷ்வரி பிரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
 

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்காளர் பட்டியலில் பெயரில்லாமல் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்காளர் பட்டியலில் பெயரில்லாமல் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தென்சென்னை மக்களவை தேர்தலில் அனைத்து மக்கள், அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் ராஜேஷ்வரி பிரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் சென்னையிலுள்ள விருகம்பாக்கத்தில் 109-வது வார்டுக்கு உட்பட்ட காவேரி பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை வாக்களிக்க அனுமதித்தது சட்டவிரோதமானது என்று குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக ஸ்ரீகாந்த் வாக்களித்த அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த ஆணையத்திடம் புகார் அளித்தும், அது நிராகரிக்கப்பட்டுள்ளதால், காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஆணையத்தின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வாக்குபதிவு நடந்த நாளிலிருந்து நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஓட்டு பிரச்னை தொடர்ந்து கொண்டே இருப்பதால் நெட்டிசன்கள் சிலர், பாவம் பா, ஒத்த ஓட்ட போட்டுட்டு ஸ்ரீகாந்த் படுறபாடு இருக்கே அய்யயோ….. என்று கலாய்த்து வருகின்றனர்.