×

ஐரோப்பா நாட்டிற்கு பறந்து செல்லும் ஆர்யா- சாயிஷா ஜோடி! எதுக்கு தெரியுமா? 

டெடி படத்தின் படப்பிடிப்புக்காக ஆர்யா- சாயிஷா ஜோடி ஐரோப்பா நாட்டிற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: டெடி படத்தின் படப்பிடிப்புக்காக ஆர்யா- சாயிஷா ஜோடி ஐரோப்பா நாட்டிற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா- சாயிஷா ஜோடி திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடிக்கும் திரைப்படம் டெடி. இப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிவரும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் சதிஷ்,கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
 

டெடி படத்தின் படப்பிடிப்புக்காக ஆர்யா- சாயிஷா ஜோடி  ஐரோப்பா நாட்டிற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: டெடி படத்தின் படப்பிடிப்புக்காக ஆர்யா- சாயிஷா ஜோடி  ஐரோப்பா நாட்டிற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆர்யா- சாயிஷா ஜோடி திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடிக்கும் திரைப்படம் டெடி. இப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிவரும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.  

மேலும் சதிஷ்,கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் திருவள்ளுர் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பா நாட்டில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு நாட்கள்  வரை தொடர்ந்து ஷூட்டிங் நடைபெறவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.