×

ஏன் உயிரோடு இருக்கிறேன் என தெரியவில்லை… உச்சக்கட்ட கவலையில் தொகுப்பாளினி ரம்யா வெளியிட்ட வீடியோ!

விஜய் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் தொகுப்பாளராக வலம் வந்தவர் விஜே ரம்யா. கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், சில கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றதாக ரம்யா அறிவித்திருந்தார். வாழ்க்கையில் பல தடுமாற்றங்களை சந்தித்த நிலையில்,தற்போது சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ரம்யா வெளியிட்டுள்ள வீடியோவில், “48 மணிநேரமாக நான் உயிருக்கு உயிராக வளர்த்த மிலோ என்ற நாயை இழந்து தவித்து வருகிறேன். வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் தற்போதைய நிலையில்
 

விஜய் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் தொகுப்பாளராக வலம் வந்தவர் விஜே ரம்யா. கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், சில கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றதாக ரம்யா அறிவித்திருந்தார். வாழ்க்கையில் பல தடுமாற்றங்களை சந்தித்த நிலையில்,தற்போது சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரம்யா வெளியிட்டுள்ள வீடியோவில், “48 மணிநேரமாக நான் உயிருக்கு உயிராக வளர்த்த மிலோ என்ற நாயை இழந்து தவித்து வருகிறேன். வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் தற்போதைய நிலையில் எங்கு பார்த்தாலும் நாய் நியாபகமாகவே உள்ளது. தூங்க முடியல… சாப்பிட முடியல…ஏன் உயிரோட இருக்குகிறோம் என நினைக்க தோணுது. என்னை மிகவும் வருத்துக்கொண்டேன். இதெல்லாத்தையும் மீறி எனக்கு ஒரு விஷயம் தோணுது.

 

 

அடுத்த 21 நாட்களோ அல்லது அதற்கு மேல் எவ்வளவு நாட்களோ இந்த மாதிரி வீட்டுக்குள்ளேயே நாயை பற்றி நினைத்துக்கொண்டிருக்க முடியும். பெற்றோரையும் வருத்தப்பட வைக்கிறேன். நாயின் பிரிவுக்கும் இழப்புக்கும் இரண்டு நாள் நேரம் கொடுத்தேன்… அந்த நேரம் முடிந்துவிட்டது. இனி என்னை எப்படியெல்லாம் சரி செய்துகொள்ளமுடியும், கவனத்தை வேறொரு விஷயத்தில் செலுத்த முடியும் என்பது குறித்து யோசித்து ஒவ்வொருநாளும் ஒரு விஷயத்தை செய்ய திட்டமிட்டுள்ளேன்..

 

 

மைலோவை பிரிந்துவாடிய எனக்கு ஆறுதல் கூறிய நண்பர்கள், உறவினர்களுக்கு நன்றி. உங்களுடைய ஆறுதல் எனக்கு மிகவும் சப்போர்ட்டிவா இருந்தது. குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல இருக்கிறது. பிரச்னைகள் வந்தால் அமைதியாக இருப்பதுதான் எனது குணம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.