எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவு நாள்: நடிகை லதா அஞ்சலி!
அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் இன்று மெரினாவில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
பழம்பெரும் நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் கடந்த 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி இயற்கை எய்தினார். அதன்படி அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் இன்று மெரினாவில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் 32 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நடிகை லதா அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.