×

‘என்ன சத்தம் இந்த நேரம்’ வனகாப்பாளரின் மெய்சிலிர்க்க வைக்கும் குரலில் இளையராஜா பாடல்: வைரல் வீடியோ!

காட்டில் யானை விரட்டும் பணியின்போது கிடைக்கும் நேரத்தில் உற்சாகமாகப் பாடல் பாடுவாராம். கோவை ஆர்.எஸ். புரம் பகுதியை அடுத்த பூசாரி பாளையத்தைச் சேர்ந்தவர் சோழமன்னன். கடந்த 9 ஆண்டுகளாக வனக்காப்பாளராக பணியாற்றி வருகிறார். இளையராஜாவின் தீவிர ரசிகரான இவர், அவரது பாடல்களை ரசனையோடு பாடி வருவது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளாக இளையராஜா பாடல்களைப் பாடி மற்றவர்களை மகிழ்வித்து வரும் இவர் இரவு நேரங்களில் காட்டில் யானை விரட்டும் பணியின்போது கிடைக்கும் நேரத்தில் உற்சாகமாகப் பாடல் பாடுவாராம்.
 

காட்டில்  யானை விரட்டும்  பணியின்போது கிடைக்கும் நேரத்தில் உற்சாகமாகப் பாடல் பாடுவாராம்.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியை அடுத்த பூசாரி பாளையத்தைச் சேர்ந்தவர் சோழமன்னன். கடந்த 9 ஆண்டுகளாக வனக்காப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இளையராஜாவின் தீவிர ரசிகரான இவர், அவரது பாடல்களை ரசனையோடு பாடி வருவது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளாக இளையராஜா பாடல்களைப் பாடி மற்றவர்களை மகிழ்வித்து வரும் இவர்  இரவு நேரங்களில் காட்டில்  யானை விரட்டும்  பணியின்போது கிடைக்கும் நேரத்தில் உற்சாகமாகப் பாடல் பாடுவாராம்.

இந்நிலையில் பயிற்சி வனச்சரகர்களுக்கான கள ஆய்வின்போது  வனக்காப்பாளர் சோழமன்னனை பாடல் பாட சொல்லி அங்கிருந்தவர்கள் கேட்க, புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலை அழகாக பாடி அசத்தியுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுக்க, இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.