×

என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு இதுதான்: நடிகை ரேவதி ஓபன் டாக்!

நான் மறுப்பு தெரிவித்த போது என் மாமா தான் என்னை சம்மதிக்க வைத்தார். நான் பாரதிராஜாவிடம் எனக்கு நடிக்க தெரியாது சென்னை: என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவுகளில் ஒன்று என் திருமணம் தான் என்று நடிகை ரேவதி கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் நடிகை ரேவதி. கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறையில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத்
 

நான் மறுப்பு தெரிவித்த போது என் மாமா தான் என்னை சம்மதிக்க வைத்தார். நான் பாரதிராஜாவிடம் எனக்கு நடிக்க தெரியாது

சென்னை:  என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவுகளில்  ஒன்று  என் திருமணம் தான் என்று நடிகை ரேவதி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளுள்  ஒருவராக வலம்வருபவர் நடிகை ரேவதி. கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறையில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ள அவர், ‘ நான் 12-ம் வகுப்பு முடித்த போது  இயக்குநர்  பாரதிராஜா என்னை சினிமாவில் நடிக்க கேட்டார். நான் மறுப்பு தெரிவித்த போது என் மாமா தான் என்னை சம்மதிக்க வைத்தார். நான் பாரதிராஜாவிடம் எனக்கு நடிக்க தெரியாது என்று சொன்னேன். அதற்கு அவர் உன்னை நடிக்க வைப்பது என் பொறுப்பு என்றார். அதன்பின்னர் தான் மண் வாசனை படத்தில்  அவர் சொல்லிக் கொடுப்பதை நிதானமாகக் கவனித்து நடித்தேன்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவுகளில் ஒன்று எனது திருமணம். கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவெடுத்திருந்தால் என் சினிமா வாழ்க்கை மாறியிருக்கும். நான் இன்னும் நிறைய படங்களில் நடித்திருப்பேன். இப்போது சில ஆண்டுகளாக நல்ல கதாபாத்திரங்கள் வருகின்றன’ என்று கூறியுள்ளார்.