×

“என் மனைவி கர்ப்பமாக போது எங்களுக்குள் விவாகரத்து…” நடிகர் சிவகார்த்திகேயன் சொல்லும் ரகசியம்!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களை தயாரித்து அமோக வரவேற்பை பெற்றுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். இயக்குநர் பாண்டிராஜின் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன், தனது திறமையினாலும், சொந்த முயற்சியினாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசூல் நாயகனாக உருவெடுத்துள்ளார். தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் ‘கனா’, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு
 

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களை தயாரித்து அமோக வரவேற்பை பெற்றுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

இயக்குநர் பாண்டிராஜின் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன், தனது திறமையினாலும், சொந்த முயற்சியினாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசூல் நாயகனாக உருவெடுத்துள்ளார். தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் ‘கனா’, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களை தயாரித்து அமோக வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது மனைவி மற்றும் குழந்தை குறித்து அளித்துள்ள பேட்டியை இங்கு காணலாம். அதில் பேசியுள்ள அவர், என்  மனைவி ஆர்த்தி அவரின் தாய் மாமன் மகள் . குழந்தை வளர்ப்பு முதல் வருமானவரி வரை எல்லாம் மனைவியின் ஆர்த்தியின் கையில் தான். நான் அவரை திருமணம் செய்துகொள்ளும் போது  அவருக்கு 21 வயது தான். வசதியான பெண். ஆனால்  அதை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார். எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பிரித்துக்கொள்ளலாம்.

இப்போது ஆர்த்தி மகள் ஆராதனா வளர்ப்பில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.  மட்டன், சிக்கன் என எதைச் சமைத்தாலும் பிரமாதமாக இருக்கும். ஆர்த்தி கர்ப்பமாக இருந்த சமயம் அது, அப்போது நான் அவரை விவாகரத்து செய்ய போகிறேன் என்று செய்தி வந்தது. நான் அந்த செய்தியை அவரிடமிருந்து மறைத்தேன். ஆனால்  மறுநாள் அவரே என்னிடம் வந்து,  திரைத்துறையில் இருந்தால் இதெல்லாம் வரும் என்று தெரியும், பார்த்துக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொன்னார். அது எனக்கு மகிழ்ச்சியையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. என்னால் மனைவி குழந்தையை  பார்க்காமல் இருக்க முடியாது. அதனால் வெளியூர் சென்றால் உடன் அழைத்து சென்றுவிடுவேன்’ என்றார்.