×

என்.ஜி.கே படத்திற்காக சூர்யா ரசிகர்கள் செய்த செயல்! வாய்பிளக்கும் அஜித், விஜய் ரசிகர்கள்!?

நடிகர் சூர்யாவுக்கு இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட் அவுட் அமைக்கும் பணியை அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். சென்னை: நடிகர் சூர்யாவுக்கு இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட் அவுட் அமைக்கும் பணியை அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சூர்யா
 

நடிகர் சூர்யாவுக்கு இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட் அவுட் அமைக்கும் பணியை அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். 

சென்னை: நடிகர் சூர்யாவுக்கு இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட் அவுட் அமைக்கும் பணியை அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். 

இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சூர்யா அரசியல்வாதியாக நடித்துள்ளார். 

முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம், வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் சூர்யாவுடன் இணைந்து தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு என்று பலர் நடித்துள்ளனர். 

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக சூர்யாவுக்கு 200 அடியில் கட் அவுட் வைப்பதற்கான பணியை சூர்யா ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். பணி முடிந்து கடைசியில் அது 210 அடிக்கும் மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஸ்வாசம் படத்திற்காக தல அஜித்திற்கு  190 அடியில் கட் அவுட்டும், ‘சர்கார்’ படத்துக்காக விஜய்க்கு 200 அடியில் கட் அவுட்  வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.