×

“என் குடும்பத்த இதுல இழுக்காதீங்க”… தர்ஷன்-சனம் பிரேக் அப் பற்றி மௌனம் கலைத்த ஷெரின்!

ஆரம்ப கட்டத்தில் நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறிக்கொண்டிருந்த ஷெரின் ஒரு டாஸ்கின் போது, தர்ஷனுக்கு மறைமுகமாக ஒரு லெட்டர் எழுதினார். மற்ற பிக் பாஸ் சீசன்களை காட்டிலும் சீசன் 3 மிகவும் சிறப்பாக இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனில் கவின் -லாஸ்லியா காதல் , ஷெரின் – தர்ஷன் இடையேயான உறவு என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்ப கட்டத்தில் நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறிக்கொண்டிருந்த ஷெரின் ஒரு டாஸ்கின்
 

ஆரம்ப கட்டத்தில் நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறிக்கொண்டிருந்த ஷெரின் ஒரு டாஸ்கின் போது, தர்ஷனுக்கு மறைமுகமாக ஒரு லெட்டர் எழுதினார்.

மற்ற பிக் பாஸ் சீசன்களை காட்டிலும் சீசன் 3  மிகவும் சிறப்பாக இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனில் கவின் -லாஸ்லியா காதல் , ஷெரின் – தர்ஷன் இடையேயான உறவு என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆரம்ப கட்டத்தில் நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறிக்கொண்டிருந்த ஷெரின் ஒரு டாஸ்கின் போது, தர்ஷனுக்கு மறைமுகமாக ஒரு லெட்டர் எழுதினார். அந்த லெட்டரை எல்லாரும் படிக்க வேண்டும் என்று கூறியவுடன் அதனை கிழித்து போட்டு விட்டார் ஷெரின். இருப்பினும் , அதை ஒட்ட வைத்த தர்ஷன் அந்த லெட்டரை படித்து விட்டார். 

பிக் பாஸ் வீட்டுக்குள் நெருக்கமாக பழகி வந்த இவர்கள் வெளியே வந்ததும், ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவில்லை. தர்ஷன் பிக் பாஸுக்கு முன்னரே ஷனம் ஷெட்டியை காதலித்து வந்ததால், அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று பேசாமல் இருப்பதாக ஷெரின் கூறினார். இரண்டு மாதங்களுக்கு ஷனம் ஷெட்டிக்கும் தர்ஷனுக்கும் திருமணம் வரை சென்ற காதல், பிரேக் அப் ஆனது.

இதற்கு காரணம் ஷெரின் தான் என்றும் ஷெரின் மீது கொண்ட காதலால் தான் தர்ஷன், சனம் ஷெட்டியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அதற்கு ஷெரினும் தர்ஷனும் மறுப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில்  ஷெரின் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிறைய நடந்து விட்டது. அதற்கு எல்லாரும் என் மீது பழி போட்டால் அதனை நான் புன்னகையுடன் ஏற்றுக் கொள்வேன். ஆனால், என் குடும்பத்தை இதற்குள் இழக்காதீர்கள். வேறு யாரோ செய்த தவறுக்கு, அடுத்தவர் மீது பழிபோடுவது தவறு.

நான் எல்லாவற்றிற்கும் அமைதியாக இருப்பது என் பலவீனம் என்று எடுத்துக் கொல்லாதீர்கள். அவர்கள் இரண்டு பேரும் பிரேக் அப் செய்து கொண்டதை விட நாட்டில் எவ்வளவோ முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. பலர் என் மீது தவறு சொன்ன போதிலும், எனக்கு ஆதரவாக இருந்த அனைவர்க்கும் நன்றி. என் மீது இருக்கும் கோபத்தை அவர்கள் கமெண்டில் தெரிவித்து ஆற்றி கொள்ள விரும்பினால் அதனை செய்யட்டும். அது என்னுடைய தரத்தை குறைக்காது. உங்கள் அன்பும் ஆதரவும் கிடைத்த நான் ரொம்ப லக்கி.” என்று பதிவிட்டுள்ளார்.