×

எனக்கு தாய்மொழியில் பேச தெரியாது… நடிகை ப்ரியா ஆனந்த் அதிரடி!

பின் பெரிய சறுக்கலாகவே சினிமா வாய்ப்புகள் இருந்து வந்த நிலையில், தற்போது சுமோ படத்தில் நடித்து வருகிறார். தமிழில் வாமனன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியா ஆனந்த், அதன் பிறகு பெரிதாக கவனிக்கப்படவில்லை. நடிகர் அதர்வாவுடன் காதல் என்று கிளம்பிய செய்தியால் கிடைக்கவிருந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் தடம் புரள, பின்னர் மீண்டும் நடிக்கத் துவங்கி, நடிகர் கெளதம் கார்த்திக்குடன் ஊர் சுற்ற ஆரம்பித்தார். அதன் பின் பெரிய சறுக்கலாகவே சினிமா வாய்ப்புகள் இருந்து வந்த நிலையில்,
 

பின் பெரிய சறுக்கலாகவே சினிமா வாய்ப்புகள் இருந்து வந்த நிலையில், தற்போது சுமோ படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் வாமனன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியா ஆனந்த், அதன் பிறகு பெரிதாக கவனிக்கப்படவில்லை. நடிகர் அதர்வாவுடன் காதல் என்று கிளம்பிய செய்தியால் கிடைக்கவிருந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் தடம் புரள, பின்னர் மீண்டும் நடிக்கத் துவங்கி, நடிகர் கெளதம் கார்த்திக்குடன் ஊர் சுற்ற ஆரம்பித்தார். அதன் பின் பெரிய சறுக்கலாகவே சினிமா வாய்ப்புகள் இருந்து வந்த நிலையில், தற்போது சுமோ படத்தில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் பல மொழிகளிலும் படங்களில் நடித்து வருவது பற்றி கேட்டதற்கு, ‘என் தந்தை மராத்தியர். என்னுடைய தாய் தெலுங்கர். ஆனால் எனக்கு மராத்தி, தமிழ், ஆங்கிலம், இந்தி, வங்காளம் ஆகிய மொழிகள் மட்டும் தான் நன்கு தெரியும். என் தாய்மொழியான தெலுங்கு எனக்குத் தெரியவே தெரியாது. அதனால் என் தாய்மொழி தான் உயர்ந்தது என எவரும் நினைக்க கூடாது. எத்தனை மொழிகளை கூடுதலாக கற்றாலும் நல்லது தான்’ என கூறி அதிர வைத்துள்ளார்.