×

உலகின் மிக வலிமையான பெண் இவரா…ஃபார்ச்சூன் இந்தியா அறிவிப்பு

ஃபார்ச்சூன் இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் மிக வலிமையான பெண்களின் முதல் 50 பட்டியலில் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார். ஃபார்ச்சூன் இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் மிக வலிமையான பெண்களின் முதல் 50 பட்டியலில் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார். பாலிவுட்டுக்குள் 2008 ஆம் ஆண்டு “ரப் நே பனா தி ஜோடி’” என்ற படத்தில் அனுஷ்கா சர்மா தடம் பதித்தார். இந்த பட்டியலில் இடம் பெரும் குறைந்த வயதுடைய பெண் இவர்
 

ஃபார்ச்சூன் இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் மிக வலிமையான பெண்களின் முதல் 50 பட்டியலில் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார்.

ஃபார்ச்சூன் இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் மிக வலிமையான பெண்களின் முதல் 50 பட்டியலில் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார்.

பாலிவுட்டுக்குள் 2008 ஆம் ஆண்டு “ரப் நே பனா தி ஜோடி’” என்ற படத்தில் அனுஷ்கா சர்மா தடம் பதித்தார்.  இந்த பட்டியலில் இடம் பெரும் குறைந்த வயதுடைய பெண் இவர் மட்டுமே. இவர் 39 வது இடத்தில் உள்ளார்.

பார்ச்சூன் இந்தியா நடிகை அனுஷ்கா சர்மா பற்றி வெளியிட்ட குறிப்பில், “சர்மா நிவ்யா, எல்லே 18, மின்த்ரா மற்றும் லெவி போன்ற பல பிராண்டுகளின் விளம்பரத் தூதராக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இவர்  ஒரு தயாரிப்பாளரும் கூட. தன்னுடைய 25 வயதில் சொந்தமாக ஸ்லேட் பிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். அதன் மூலம்  என்ஹெச் 10, பில்லாரி மற்றும் பரி ஆகிய மூன்று சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார்.

இது 40 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. பாலிவுட்டைத் தாண்டி, கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நெட்ஃபிக்ஸ் உடன் இணைந்து ‘புல்பூல்’ என்ற திரைப்படத்தையும், ‘மை’ என்ற வலைத் தொடரையும் தயாரித்து வருகிறார். 

இதனால் இந்தியாவின் மிக வலிமையான பெண்களின் பார்ச்சூன் வருடாந்திர தரவரிசை பட்டியில் இவர் இடம்பெற்றுள்ளார். அவர்களின் வணிக புத்திசாலித்தனத்தாலும், சமூக மற்றும் கலாச்சார பண்பாலும் இந்த பட்டியலில் சேர்த்து ஃபார்ச்சூன் இந்தியா கௌரவித்துள்ளது.