×

உறியடி 2: இயக்குநருக்கு லேப்டாப், இசையமைப்பாளருக்கு ஐபேட்! எவ்வளவு தாராள மனசு சூர்யாவுக்கு!

உறியடி 2 படத்தின் தயாரிப்பாளரான சூர்யா அப்படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருக்கு ஐபேட் மற்றும் லேப்டாப்பை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். சென்னை: உறியடி 2 படத்தின் தயாரிப்பாளரான சூர்யா அப்படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருக்கு ஐபேட் மற்றும் லேப்டாப்பை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு விஜயகுமார் இயக்கி நடித்த ‘உறியடி’ திரைப்படம் நல்ல விமர்சனம் பெற்றது. அதைத்தொடர்ந்து உறியடி 2 படம் இன்று வெளியானது. இப்படத்தை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரித்திருக்கிறது. இப்படத்தை பார்த்த பலரும்
 

உறியடி 2 படத்தின் தயாரிப்பாளரான சூர்யா அப்படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருக்கு ஐபேட் மற்றும் லேப்டாப்பை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். 

சென்னை: உறியடி 2 படத்தின் தயாரிப்பாளரான சூர்யா அப்படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருக்கு ஐபேட் மற்றும் லேப்டாப்பை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். 

கடந்த 2016ம் ஆண்டு விஜயகுமார் இயக்கி நடித்த ‘உறியடி’ திரைப்படம் நல்ல விமர்சனம் பெற்றது. அதைத்தொடர்ந்து உறியடி 2 படம் இன்று வெளியானது. இப்படத்தை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரித்திருக்கிறது. 

இப்படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ்வான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். ஊழல், சாதியக் கட்சிகள், அரசியல்வாதிகள் என அரசியல் பேசும் இப்படம், தற்போதைய தேர்தல் களத்துக்கு நல்ல டைமிங்காக களமிறங்கியுள்ளதாகக் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா ஏற்கனவே என்.ஜி.கே பட குழுவில் உள்ள 210 நபர்களுக்கு 1சவரன் தங்கக்காசும், பணமும் கொடுத்துத்திருந்தார். அந்த வகையில் நேற்று இப்படத்தின் படக்குழுவை சந்தித்த சூர்யா இயக்குநர் விஜயகுமாருக்கு ஒரு மேக்புக் புரோ லேப்டாப் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிற்கு ஐபேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

allowfullscreen

இதை மகிழ்ச்சியுடன் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதை பார்த்த சிலர் சூர்யாவுக்கு எவ்வளவு தாராள மனசு என்று புகழ்ந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: அரசியலா?, விஜய் சேதுபதி படமா?: குழப்பத்தில் ஸ்ருதி