×

ஈஷா யோகா மையத்தில் களைகட்டிய மகா சிவராத்திரி: காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி பங்கேற்பு!

காலை 6 மணி வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் இசை நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என களைகட்டியது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் ஈஷா மையத்தில் 26-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் இசை நிகழ்ச்சி,
 

காலை 6 மணி வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட  இந்த விழாவில் இசை நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம்  என களைகட்டியது. 

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும்  ஈஷா மையத்தில் 26-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா  நேற்று  சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று  மாலை 6 மணி முதல் இன்று  காலை 6 மணி வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட  இந்த விழாவில் இசை நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம்  என களைகட்டியது. 

இந்நிகழ்ச்சியில்  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ஜி.கே.வாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக்கும் விழாவில் பங்கேற்று பாடல்களைப் பாடினார். இன்டியா காட் டேலன்ட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நடனக்குழுவின் ஆட்டம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.

இதனிடையே  சத்குரு ஜக்கி வாசுதேவ்  வழக்கம் போல நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். 

இந்த சிறப்பு வழிபாட்டில் நடிகைகள் காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி, ஸ்ரேயா உள்ளிட்டோரும் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.