×

இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்: இரண்டாவது திருமணத்தை குறித்து ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த நடிகை மைனா!

நடிகை மைனா தனது 2வது திருமணத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை: நடிகை நந்தினி(மைனா) தனது 2வது திருமணத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் ’மைனா’ கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி. அதுமட்டுமின்றி வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர், மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து
 

நடிகை மைனா தனது 2வது திருமணத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சென்னை: நடிகை நந்தினி(மைனா) தனது 2வது திருமணத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் ’மைனா’ கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி. அதுமட்டுமின்றி வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர், மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். 

இவர் கணவர் இறந்ததை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் தொலைக்காட்சி தொடர், ரியாலிட்டி ஷோக்கள் என்று பிச்சியாக தனது வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் இவர் தற்போது சீரியல் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்க பட்டது. தற்போது இதுகுறித்து அவர் கூறுகையில் ‘எனக்கு யோகேஷை 2013-ல இருந்தே தெரியும். ஆனா கடைசி 1 வருஷமா தான் ரொம்ப நெருக்கமா இருக்கோம். உனக்குன்னு ஒரு லைஃப் வேணாமா, நடந்ததெல்லாம் மறந்துட்டு கடந்து போன்னு சொன்னாங்க. ஆனா எப்போவும் என் கிட்ட பாசமாக இருப்பாங்க. நான் அவங்கள ஒரு நல்ல ஃபிரெண்டா தான் நினைச்சிட்டு இருந்தேன். ஜனவரி மாசம் அவங்க அப்பா, அம்மா என்ன பாக்க வந்தவங்க, உன்னை பொண்ணு கேட்டு வந்திருக்கிறோமென்று சொன்னாங்க. எனக்கு பயங்கர ஷாக். கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறோம்’ என்று கூறியுள்ளார்.