×

இலங்கை குண்டு வெடிப்பு: என் மனம் நொறுங்கிவிட்டது நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட உருக்கமான பதிவு!

இலங்கையில் நடந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை காஜல் அகர்வால் ஆறுதல் கூறியுள்ளார். சென்னை: இலங்கையில் நடந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை காஜல் அகர்வால் ஆறுதல் கூறியுள்ளார். ஈஸ்டர் பண்டிகையான ஏப்ரல் 21ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தன. அப்போது விஷமிகளின் திட்டமிட்ட தாக்குதலால் இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் காலை 8.45 மணிக்கு தொடர் குண்டு வெடிப்பு அரங்கேறியது. அதில் 310ற்கும்
 

இலங்கையில் நடந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை காஜல் அகர்வால்  ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை: இலங்கையில் நடந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை காஜல் அகர்வால் ஆறுதல் கூறியுள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையான ஏப்ரல் 21ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தன. அப்போது விஷமிகளின் திட்டமிட்ட தாக்குதலால் இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் காலை 8.45 மணிக்கு தொடர் குண்டு வெடிப்பு அரங்கேறியது. 

அதில் 310ற்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 500ற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் குண்டுவெடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் அதில், ‘இலங்கையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தொடர் குண்டு வெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். 

 சில நாட்களுக்கு முன்பு நான் இலங்கையில் தான் இருந்தேன். நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் இப்படி ஒரு வெறுப்பும்,கோபமும் உண்டாகிறது? மறைந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: படுக்கைக்கு அழைத்ததால் திரையுலகில் இருந்து விலகினேன்! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!