×

இறுதி போட்டிக்கு கூட அழைக்கப்படாத சரவணன் மற்றும் மதுமிதா: காரணம் இதுதானாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் சரவணன் மற்றும் மதுமிதா இறுதிப் போட்டியிலாவது கலந்து கொள்வார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் சரவணன் மற்றும் மதுமிதா இறுதிப் போட்டியிலாவது கலந்து கொள்வார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரை நான்கு பேர்கள் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். இன்று பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள
 

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் சரவணன் மற்றும் மதுமிதா இறுதிப் போட்டியிலாவது கலந்து கொள்வார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் சரவணன் மற்றும் மதுமிதா இறுதிப் போட்டியிலாவது கலந்து கொள்வார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பிக் பாஸ்  நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரை நான்கு  பேர்கள் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். இன்று பிக் பாஸ்  டைட்டிலை வெல்ல போவது யார் என்பதைத்  தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கிறார்கள். 

கடந்த ஒருவாரமாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற சீசன் போட்டியாளர்கள், இந்த சீசனில் எவிக்ட் ஆனவர்கள் என பலரும் வந்து உற்சாகமூட்டினார்கள். குறிப்பாக விஜய் டிவியின் பிரபலங்கள் கூட பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை புரிந்து அதகளப்படுத்தினார்கள்.

இருப்பினும் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சரணவன், மதுமிதா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை. பல இடங்களில் அவர்களின் பெயர்களை கூட யாரும் சொல்லவில்லை.  இதற்கு காரணம், பெண்கள் குறித்து தவறான கருத்தை கூறியதால்  சரவணன் வெளியேற்றப்பட்டார். அதேபோல் மதுமிதா  மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் இவர்கள் இருவரும்  சர்ச்சையில் சிக்கி விலகியதால் இவர்களை மீண்டும் அழைக்கவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் டிவிக்கும் மதுமிதாவுக்கும் பஞ்சாயத்து சென்று கொண்டிருப்பதால் அவரை அழைக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை சரவணன் அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.