×

‘இறந்தது என் கணவர் இல்லை…சின்னதிரையில் நிறைய ரேகாக்கள் இருக்கிறார்கள்’ : நடிகை ரேகா நாயர் விளக்கம்!

குடும்ப பிரச்னை காரணமாக கோபிநாத் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னதிரை நடிகை ஜெனிபர் ரேகா. இவர் ஓவியா உள்ளிட்ட சில டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு கோபிநாத் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோபிநாத் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மேனஜராக வேலை பார்த்து வந்தார். இதையடுத்து குடும்ப பிரச்னை காரணமாக கோபிநாத் அலுவலகத்தில் தூக்கிட்டு
 

குடும்ப பிரச்னை காரணமாக கோபிநாத் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சின்னதிரை நடிகை  ஜெனிபர் ரேகா. இவர் ஓவியா உள்ளிட்ட சில  டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு கோபிநாத் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோபிநாத்  அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மேனஜராக வேலை பார்த்து வந்தார். இதையடுத்து குடும்ப பிரச்னை காரணமாக கோபிநாத் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த செய்தி காட்டுத்தீ போல பரவ யார் அந்த  ஜெனிபர் ரேகா என்று பலரும் தேட ஆரம்பித்தனர். இதில் சிலர் நாம் இருவர் நமக்கு இருவர்  தொடரில் நடித்த ரேகா நாயர் புகைப்படத்தைத் தவறாகப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து   நடிகை ரேகா நாயர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ‘வணக்கம் நான் தான் ரேகா நாயர் பேசுறேன். சின்னதிரையில்  நிறைய ரேகாக்கள் இருக்காங்க. இன்னைக்கு  நடந்த சம்பவம் ஓவியா சீரியலில் நடிச்சிட்டு இருந்த ஜெனிபர் ரேகாவின் கணவர். அதுவும் பொய்யாக கூட இருக்கலாம்.

நான் என் கணவர் இரண்டு பேரும் நல்லாத்தான் இருக்கிறோம் எனக்கும் என் கணவருக்கும் எதுவும் நடக்கவில்லை. என் போட்டோவுடன் வரும் செய்தி முற்றிலும் தவறானது’ என்று கூறியுள்ளார்.