×

இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது! கேக் வெட்டி கொண்டாடிய பட குழு!

தினேஷ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சென்னை: தினேஷ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. இதில் நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார்.
 

தினேஷ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

சென்னை: தினேஷ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. இதில் நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார்.

இந்நிலையில் சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. இரண்டு கட்டமாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவை ஒட்டி படக்குழுவினர் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அதையடுத்து இப்படத்தின் எடிட்டிங், டப்பிங் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இப்படம் இருக்கும் என்று இயக்குநர் அதியன் ஆதிரை கூறியுள்ளார்.