இயக்குனர் வெற்றிமாறன் ரூட்டுக்கு டிராக் மாறிய; லிங்குசாமி!?
இயக்குநர் வெற்றிமாறனைப் போல் நாவலை படமாக எடுக்க இயக்குநர் லிங்குசாமி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனைப் போல் நாவலை படமாக எடுக்க இயக்குநர் லிங்குசாமி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொந்தக் கதை எழுதியது போதும், இயக்குனர் வெற்றிமாறன் போல் நாவலைப் படமாக்கலாம் என்ற முடிவை ‘சண்டைக்கோழி – 2 ‘ரிலீசான,2 வது நாளே இயக்குனர் லிங்குசாமி முடிவெடுத்திருப்பார் போல!
ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்கப்போவதாக அவர் தரப்பில் இருந்தே செய்திகள் வந்தது.அதுக்கும் போட்டியாக சிலர் கிளம்பிய தகவல் வந்ததும்,அந்த ஐடியாவை ஆழ் மனதிலிருந்து அடியோடு நீக்கிவிட்டார். தற்போது அவரது ஆஸ்தான ரைட்டரான எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சஞ்சாரம்’ நாவலை படமாக எடுப்பதென்று முடிவெடுத்திருக்கிறார்.
முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து, நாவலை சினிமா மொழிக்கு ஏற்ற வடிவமாக மாற்றும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பக்காவாக ஸ்க்ரிப்ட் ரெடியானதும், ஹீரோ, ஹீரோயின் டெக்னீஷியன் யார் என்ற விவரங்களை அதிகாரப்பூர்வமாக சொல்லும் முடிவில் இருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.
இந்த நாவலுக்குத்தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியாச்சும் பழைய பன்னீர் செல்வமா வந்துருங்க ‘லிங்கு’பாஸ்.