×

இயக்குனர் இமயம் பாரதிராஜா வீட்டில் கொள்ளை… உடனிருந்தவர்களே கைவரிசை காட்டியதால் அதிர்ச்சி..!

பாரதி ராஜாவின் வாழ்நாளிலே முதன் முறையாக அவரது இல்லத்தில் திருட்டு நடந்திருப்பதை எண்ணி மனம் உடைந்தார். பிரபல இயக்குநரான பாரதி ராஜாவிற்கு திருவான்மியூர் நீலாங்கரை மற்றும் தியாகராய நகரில் இரண்டு வீடுகள் உள்ளன. தனது நீலாங்கரை வீட்டில் வசித்து வரும் இயக்குநர் பாரதி ராஜா அவ்வப்போது வீட்டிற்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தனது, தியாகராய நகர் வீட்டில் தங்கி கொள்வார். அதே போல, இரண்டு நாட்களுக்கு முன்பு தி.நகர் வீட்டில் தங்கியுள்ளார். அன்று இரவு அவரது
 

பாரதி ராஜாவின் வாழ்நாளிலே முதன் முறையாக அவரது இல்லத்தில் திருட்டு நடந்திருப்பதை எண்ணி மனம் உடைந்தார்.

பிரபல இயக்குநரான பாரதி ராஜாவிற்கு திருவான்மியூர் நீலாங்கரை மற்றும் தியாகராய நகரில் இரண்டு வீடுகள் உள்ளன. தனது நீலாங்கரை வீட்டில் வசித்து வரும் இயக்குநர் பாரதி ராஜா அவ்வப்போது வீட்டிற்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தனது, தியாகராய நகர் வீட்டில் தங்கி கொள்வார். அதே போல, இரண்டு நாட்களுக்கு முன்பு தி.நகர் வீட்டில் தங்கியுள்ளார். அன்று இரவு அவரது செல்போன், பர்ஸ் உள்ளிட்ட பொருட்களைத் தனது படுக்கையறையின் அருகே  வைத்து விட்டு உறங்கியுள்ளார். 

காலையில் எழுந்து பார்த்த போது, பாரதி ராஜாவின் 1 லட்சம் மதிப்பிலான செல்போன், பர்ஸ் மற்றும் பூஜை அறையிலிருந்த ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பாரதி ராஜாவின் வாழ்நாளிலே முதன் முறையாக அவரது இல்லத்தில் திருட்டு நடந்திருப்பதை எண்ணி மனம் உடைந்த பாரதி ராஜா, அவரது வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களைத் தவிர வேறு யாரும் அந்த பொருட்களை எடுக்க வாய்ப்பில்லை என்று மாம்பலம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து, பாரதி ராஜாவின் இல்லத்தில் வேலை செய்யும் ஆட்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.