×

இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர் ராஜன் மாரடைப்பால் காலமானதாக வதந்தி!

தற்போது சின்னத்திரையிலும் கால்பதித்துள்ள இவர் தேர்தல் நேரங்களில் அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்யவும் தவறுவதில்லை. வைதேகி காத்திருந்தாள்,அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர் ராஜன். இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி பல படங்களில் குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையிலும் கால்பதித்துள்ள இவர் தேர்தல் நேரங்களில் அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்யவும் தவறுவதில்லை. இந்நிலையில் ஆர்.சுந்தர் ராஜன் மாரடைப்பால் காலமானதாகச் செய்தி வெளியானது. இதனால்
 

தற்போது  சின்னத்திரையிலும் கால்பதித்துள்ள இவர் தேர்தல் நேரங்களில் அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்யவும்  தவறுவதில்லை. 

வைதேகி காத்திருந்தாள்,அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர் ராஜன். இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி பல படங்களில் குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது  சின்னத்திரையிலும் கால்பதித்துள்ள இவர் தேர்தல் நேரங்களில் அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்யவும்  தவறுவதில்லை. 

இந்நிலையில் ஆர்.சுந்தர் ராஜன் மாரடைப்பால் காலமானதாகச் செய்தி வெளியானது. இதனால் அவரது நண்பர்களும் திரையுலகினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால்  இது வெறும் வதந்தி தான் என்றும்  ஆர்.சுந்தர் ராஜன் நலமாக உள்ளார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து கூறப்பட்டுள்ளது.