×

இன்னும் சில நாட்களில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சிக்கலில் சிக்கிய சாய் பல்லவி

இப்படத்திற்கு எதிர்ப்பு பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரேமம் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிப் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதில் மலர் டீச்சராக வலம் வந்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளார். இவர் கடைசியாக சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நடத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் வேணு உடுகுலா இயக்கத்தில் ‘விரத பர்வம் 1992’ என்ற தெலுங்கு
 

இப்படத்திற்கு எதிர்ப்பு பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிப் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதில் மலர் டீச்சராக வலம் வந்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளார்.  இவர் கடைசியாக சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நடத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் வேணு உடுகுலா இயக்கத்தில்   ‘விரத பர்வம் 1992’ என்ற தெலுங்கு படத்தில் ராணாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் சாய் பல்லவி நாட்டுப்புற பாடகியாக இருந்து நக்சலைட்டாக மாறுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும்  இந்த படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு எதிர்ப்பு பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் படத்தை  திரையிட்டுக் காண்பித்த பிறகு தான் வெளியிட வேண்டும் என்றும் இல்லையென்றால் படத்தை வெளியிடக் கூடாது என்றும்  கூறி வருகின்றனர். 

அயோத்தி வழக்கில் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் ‘விரத பர்வம் 1992’ படத்துக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பு, படக்குழுவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.