இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்க இங்கிலாந்து பறந்த முன்னணி நடிகைகள்! வைரல் போட்டோ!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காகப் பல திரையுலக பிரபலங்கள் போட்டியை நேரில் கண்டு ரசிக்க இங்கிலாந்து சென்று வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காகப் பல திரையுலக பிரபலங்கள் போட்டியை நேரில் கண்டு ரசிக்க இங்கிலாந்து சென்று வருகின்றனர். அந்த வகையில் நாளை பிர்மிங்காம் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
அதில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறுவது மட்டுமின்றி இங்கிலாந்தைத் தொடரிலிருந்து வெளியேற்றவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாளைய போட்டி சற்று விறுவிறுப்பாகக் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க இங்கிலாந்துக்கு திரிஷா, வரலட்சுமி, பிந்து மாதவி ஆகியோர் நேரில் செல்கின்றனர். அவர்கள் அனைவரும் இங்கிலாந்து கிளம்புவதற்கு முன் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைச் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியைக் காண சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் நேரில் சென்றனர். அதே போன்று இந்தியா-மே.இ.தீவுகள் அணிகள் மோதிய போட்டியைக் காண சரத்குமார்-ராதிகா ஆகியோர் சென்றது குறிப்பிடத்தக்கது.