×

இந்த நடிகை நடிக்க வந்து ஏழு ஆண்டுகள்தான் ஆகிறது! ஆனால்,என்ன காரியம் செய்திருக்கிறார் பாருங்கள்!?

சினிமாவிலும் சரி,அரசியலிலும் சரி அமைதிப்படை அமாவாசைகளுக்கு பஞ்சமே கிடையாது! மும்பை: சினிமாவிலும் சரி,அரசியலிலும் சரி அமைதிப்படை அமாவாசைகளுக்கு பஞ்சமே கிடையாது! வளர்ந்து வரும் காலங்களில் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் ஆட்களை,வளர்ந்ததும் கழட்டி விடுவதில் அரசியல்வாதிகளை விட சினிமாக்காரர்களே எப்போதும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நடமாடும் சாட்சிகள் நிறைய உண்டு! இந்த செய்தியை படிக்கிற உங்களுக்கே இந்த மாதிரி ஒரு பெரிய லிஸ்ட் இருக்கக்கூடும்.ஆனால்,விதிவிலக்காகவும் சிலர் இருக்கிறார்கள்.உதாரணத்திற்கு அஜித்,விஜய் இருவரையும் சொல்லாம்.விஜய்,தன்னுடன் ஆரம்ப காலத்தில் இருந்து உடன்
 

சினிமாவிலும் சரி,அரசியலிலும் சரி அமைதிப்படை அமாவாசைகளுக்கு பஞ்சமே கிடையாது!

மும்பை: சினிமாவிலும் சரி,அரசியலிலும் சரி அமைதிப்படை அமாவாசைகளுக்கு பஞ்சமே கிடையாது! வளர்ந்து வரும் காலங்களில் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் ஆட்களை,வளர்ந்ததும் கழட்டி விடுவதில் அரசியல்வாதிகளை விட சினிமாக்காரர்களே எப்போதும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நடமாடும் சாட்சிகள் நிறைய உண்டு!

இந்த செய்தியை படிக்கிற உங்களுக்கே இந்த மாதிரி ஒரு பெரிய லிஸ்ட் இருக்கக்கூடும்.ஆனால்,விதிவிலக்காகவும் சிலர் இருக்கிறார்கள்.உதாரணத்திற்கு அஜித்,விஜய் இருவரையும் சொல்லாம்.விஜய்,தன்னுடன் ஆரம்ப காலத்தில் இருந்து உடன் இருக்கும் ட்ரைவர்,மேக்-அப் மேன்,காஸ்ட்யூமர்,உதவியாளர் அத்தனை பேரையும் இன்று வரை உடன் வைத்திருக்கிறார்.தவிர,அவர்களுக்கு என்று சாலிகிராமத்தில் தனியாக ஒரு அப்பார்ட்மெண்ட் கட்டிக்கொடுத்து அவர்களை அங்கே தங்க வைத்திருக்கிறார்.

 

இவரைப்போலவே அஜித்தும் அவரது உதவியாளர்களுக்கு நீலாங்கரை ஏரியாவில் தனித்தனியாக வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.இவர்களைப்போலவே தான் நடிக்க வந்த காலத்திலிருந்து தன்னோடு இருக்கும் இரண்டு உதவியாளர்களுக்கு வீடு வாங்கிக்கச் சொல்லி ஆளுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் பாலிவுட் நடிகை அலியா பட்! 

2012-ல் கரண் ஜோக்கருடன் இவர் அறிமுகமான படம் ‘ஸ்டூடெண்ட் ஆஃப் தி இயர்’.முதல் படத்திலேயே ஃபிலிம் ஃபேர் விருது வாங்கி பாலிவுட்டில் கவனம் ஈர்த்தவர் இவர்.

தனது காதலன் ரன்பீர் கபூருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருக்கிற அலியா பட் கடந்த வாரம் மும்பையின் பிரதான ஏரியாவில் 13 கோடி ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கியிருக்கிறார்.அந்த சந்தோசத்தை ஏழு வருடமாக தன்னுடன் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றுதான் உதவியாளர்களுக்கு ஆளுக்கு ஐம்பது லட்சம் கொடுத்திருக்கிறார் அழியா பட்!

சமீபகாலமாக நம்ம ஊர் நடிகர்,நடிகைகள் பாம்பே சினிமாவில் உள்ள இரவு நேர கல்ச்சரை இங்கேயும் ஃபாலோ பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்! இந்த மாதிரி விஷயத்தையும் கொஞ்சம் ஃபாலோ பண்ணுங்கப்பா!?