×

இந்த ஒரு காரணத்தினால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை: பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை பூஜா தேவாரியா தான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குயேற்க வில்லை என்பது பற்றி கூறியுள்ளார். சென்னை: நடிகை பூஜா தேவாரியா தான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குயேற்க வில்லை என்பது பற்றி கூறியுள்ளார். மயக்கம் என்ன படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா தேவாரியா. அதைத்தொடர்ந்து இறைவி, ஆண்டவன் கட்டளை, உள்ளிட்ட படங்களில் பிரபலமானவர். மேடை நாடக கலைஞரான இவர் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் படங்களில் நடிக்க
 

நடிகை பூஜா தேவாரியா தான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குயேற்க வில்லை என்பது பற்றி கூறியுள்ளார்.

சென்னை: நடிகை பூஜா தேவாரியா தான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குயேற்க வில்லை என்பது பற்றி கூறியுள்ளார்.

மயக்கம் என்ன படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா தேவாரியா. அதைத்தொடர்ந்து இறைவி, ஆண்டவன் கட்டளை, உள்ளிட்ட படங்களில் பிரபலமானவர். மேடை நாடக கலைஞரான இவர் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் படங்களில் நடிக்க துவங்கினார். 

மற்ற நடிகைகள் போல் இல்லாமல் தன்னுடைய மனதிற்குப் பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி மேடை நாடகங்களில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மூன்று சீசனுக்கும் அழைப்பு வந்ததாம், ஆனால் இந்த ஒரே காரணத்திற்காக தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். அது என்ன காரணம் என்பது பற்றி முதல் முறையாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘எனக்கு அடுத்தவர் முன்பு, பல் துலக்குவது மற்றும் தூங்குவது பிடிக்காது’ இந்த ஒரே காரணத்திற்காகத் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.