×

‘இதனால் தான் கவினை அறைந்தேன்’ : உண்மையை உடைத்த நண்பர் பிரதீப்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினை அடித்ததற்கான காரணத்தை அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினை அடித்ததற்கான காரணத்தை அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் 3 தமிழ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து முடிந்துள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸ் குடும்பத்தினர் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். அப்படி கவினை காண அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி வந்திருந்தார். அப்போது கவினிடம், 80 நாட்கள் பழகுனவங்க தான் உனக்கு
 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினை அடித்ததற்கான காரணத்தை அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினை அடித்ததற்கான காரணத்தை அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் 3 தமிழ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து முடிந்துள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸ் குடும்பத்தினர் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். அப்படி கவினை காண அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி வந்திருந்தார். அப்போது கவினிடம், 80 நாட்கள் பழகுனவங்க தான் உனக்கு முக்கியமா போயிட்டாங்கல. பிக் பாஸ் வீட்டுல மத்தவங்களுக்கு விட்டுக்கொடுத்து நீ எங்களை விட்டு கொடுத்துட்ட என்று ஆதங்கப்பட்டார். 

அதன்பிறகு ஹவுஸ்மேட்ஸ்  மத்தியில்,  நீ இவ்வளவு கேவலமா ஆடுன கேமுக்கு, நீ மட்டமா ஒரு விஷயம் பண்ணதுக்கு, உன்ன நம்புனவங்கள நீ கைவிட்டதுக்கு, இங்க இருக்குற எல்லாரையும் ஹர்ட் பண்ணதுக்கு  என்று சொல்லி பளார் என்று  கவினின் கன்னத்தில் அறைந்தார்.  இதைக் கண்டு லாஸ்லியா உள்ளிட்ட மொத்த பிக் பாஸ் வீடும் அதிர்ச்சியில் உறைந்தது.

இந்நிலையில் கவினை அடித்தற்கான  காரணத்தைக் கூறியுள்ளார் பிரதீப், அதில், ‘கவினுக்கு அவனுடைய அம்மா வெளியே எப்படி இருக்கிறார் என்று தெரியாது. அவர் மிகவும் நல்லவர். அவரும் என் அம்மா மாதிரி தான். ஆனால் இவன் செய்யும் சில விஷயங்களால் அவரையும் சேர்த்து திட்டுகிறார்கள். எல்லாம் இவனால்தான். அதனால் தான் அவனை அடித்தேன்’ என்றார்.