×

இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த சித் ஸ்ரீராம்! யார் படத்துல தெரியுமா? 

சித் ஸ்ரீராம், மணிரத்னம் தயாரிக்கும் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். சென்னை: சித் ஸ்ரீராம், மணிரத்னம் தயாரிக்கும் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். தமிழில் தள்ளிப் போகாதே.., மறுவார்த்தை பேச, குறும்பா, கண்ணான கண்ணே… உட்பட ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியிருப்பவர் சித் ஸ்ரீராம். தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பாடல் பாடி அசதி வருகிறார். இவரின் குரல் தன்மைக்காகவே ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் இவர்
 

சித் ஸ்ரீராம், மணிரத்னம் தயாரிக்கும் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சென்னை: சித் ஸ்ரீராம், மணிரத்னம் தயாரிக்கும் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தமிழில் தள்ளிப் போகாதே.., மறுவார்த்தை பேச, குறும்பா, கண்ணான கண்ணே… உட்பட ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியிருப்பவர் சித் ஸ்ரீராம். தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பாடல் பாடி அசதி வருகிறார். இவரின் குரல் தன்மைக்காகவே ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. 

இந்த நிலையில் இவர் அடுத்த படியாக  இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில். ஆம்… மணிரத்னம் கதை, திரைக்கதையில் அவர் உதவியாளர் தனசேகரன் இயக்கும் படம், வானம் கொட்டட்டும். விக்ரம் பிரபு, மடோனா நடிக்கும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உள்படப் பலர் நடிக்கின்றனர்.

முதல் முறையாக இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக சித்ஸ்ரீராம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் படக்குழுவினர் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.