×

‘அவரால் எனக்கு பயமாக உள்ளது’ : மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்!

ஒடியன் பட இயக்குநர் ஸ்ரீகுமாருக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியர் புகார் அளித்துள்ளார். ஒடியன் பட இயக்குநர் ஸ்ரீகுமாருக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியர் புகார் அளித்துள்ளார். மலையாளத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திலீப் மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். இதனால் தற்போது வரை தனியாக வாழ்ந்து
 

ஒடியன் பட இயக்குநர்  ஸ்ரீகுமாருக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியர்  புகார் அளித்துள்ளார். 

ஒடியன் பட இயக்குநர்  ஸ்ரீகுமாருக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியர்  புகார் அளித்துள்ளார். 

மலையாளத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திலீப் மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். இதனால் தற்போது வரை தனியாக வாழ்ந்து வரும் மஞ்சு வாரியர் மீண்டும் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்தார். மலையாளத்தில் இயக்குநர்  ஸ்ரீகுமார் இயக்கத்தில் மோகன்  ஒடியன் திரைப்படம் நல்ல வரவேற்பை  பெற்றது. 

இந்நிலையில் மஞ்சு வாரியர்  இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிராக மஞ்சுவாரியார், கேரள காவல்துறை தலைமை அதிகாரி லோக்நாத் பெஹேராவிடம்  புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த மனுவில், இயக்குநர்  ஸ்ரீகுமார் தன்னையும், தந்து நண்பர்களையும் சமூக வலைதளங்களில் மிரட்டியும், அவதூறு பரப்பும் விதமாக பேசி வருகிறார் என்றும் இதை அவருடன் சேர்ந்து பலரும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை குறித்து வந்த போட்டோக்கள், மீம்ஸ்கள் என மொத்த ஆதாரத்தையும் ஸ்ரீகுமாருக்கு எதிராக கொடுத்துள்ளார். 

இது குறித்து  செய்தியாளர்களைச் சந்தித்த மஞ்சு வாரியர்,  நான் சமூக வலைத்தளங்களில் பரவும் போலி பரப்புரைகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளேன். ஒடியன்  படத்திற்கு பிறகே இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகுமார் என்னை குறித்து பல அவதூறுகளைப் பரப்புகிறார். அவர் எனக்கு எதிராக பல தீமைகளைச் செய்வார் என்று பயமாக உள்ளது’ என்றார்.