×

அழகுன்னா என்னன்னு தெரியுமா? மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை துணிச்சலாக வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை: நடிகை காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகைகள் என்றாலே அழகு என்ற எண்ணம் தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வரும். நடிப்பு தொழிலுக்கு எந்த முதலீடும் தேவையில்லை. அழகு என்ற ஒன்று இருந்தால் போதும் என்ற கருத்தும் பொதுவாக உள்ளது. அதனால் தான் நடிகைகள் தங்களை பெரும்பாலும் மேக்கப் இல்லாமல் காட்டி கொள்வதில்லை.
 

நடிகை காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சென்னை:  நடிகை காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகைகள் என்றாலே  அழகு என்ற எண்ணம் தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வரும். நடிப்பு தொழிலுக்கு எந்த முதலீடும் தேவையில்லை. அழகு என்ற ஒன்று இருந்தால் போதும் என்ற கருத்தும் பொதுவாக உள்ளது.  அதனால் தான் நடிகைகள் தங்களை பெரும்பாலும் மேக்கப் இல்லாமல் காட்டி கொள்வதில்லை. ஆனால்  இந்த நடைமுறையை உடைத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள்  ஒருவராக வலம்  வரும்  காஜல் அகர்வால்  விஜய், அஜித், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர்களுடன் ஜோடி  சேர்ந்து நடித்துள்ளார். தற்போது கோமாளி, இந்தியன் 2 போன்ற புதிய படங்களில் நடித்து வருகிறார். 

 

இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காஜல் மேக்கப் போடாமல், தனது உண்மையான முகத் தோற்றத்தை  வெளியுலகிற்குக் காட்டி  உள்ளார். மேலும் அந்த பதிவில் மேக்கப்பிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ சமீபகாலமாக நாம் மனித இனத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், சுயமரியாதை இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் நாம்  பணத்தைச் செலவிட்டு அழகு சாதன பொருட்களை வாங்கி அழகாக மாற முயற்சி செய்கிறோம். அப்படி செய்தால் தான் இந்த உலகத்தில் நம்மை ஏற்றுக்கொள்வார்கள்  என்று  நினைக்கிறோம். ஆனால் நம்முடைய வேறொரு பிம்பத்தைப் பெறுவதற்கு முயற்சிப்பதை விட, நாம் நமது உண்மையான சுயத்தை ஏற்றுக்கொண்டால் தான் நம்மால் உண்மையில் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.  ஒப்பனை செய்து கொள்வது நம் உடலை அழகாக்கும். ஆனால்  நம் உள்ளதை அழகாக்குமா? உண்மையில் அழகு என்பது நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே நம்மை ஏற்றுக் கொள்வது தான்’ என்று பதிவிட்டுள்ளார்.

அழகு என்றால் வெள்ளையாக இருப்பது என்ற கோட்பாட்டை இந்த ஒரு பதிவின் மூலம் உடைத்தெறிந்துள்ள காஜலுக்கு வலைதளவாசிகள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.