×

அப்பாவுக்கும் பையனுக்கும் திருட்டுதான் தொழில்! விஜய் சேதுபதியும் அவர் மகனும் சண்டை போட்டது இதுக்குதான்!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சேதுபதி,பண்ணையாரும் பத்மினியும் படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – அருண்குமார் மூன்றாவது முறையாகக் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ‘சிந்துபாத்’. இதில் ‘இறைவி’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். காதல் கலந்த ஆக்சனுடன் உருவாகி வரும் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை கே புரொடக்சன்ஸ்
 

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சேதுபதி,பண்ணையாரும் பத்மினியும் படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – அருண்குமார் மூன்றாவது முறையாகக் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ‘சிந்துபாத்’. இதில் ‘இறைவி’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். காதல் கலந்த ஆக்சனுடன் உருவாகி வரும் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தை கே புரொடக்சன்ஸ் சார்பில் ராஜராஜன் தயாரித்துள்ளார். ஒரு எளிய மனிதன் எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும், அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக சிந்துபாத் உருவாகியுள்ளது.

முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன்:

இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா  மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். விஜய் சேதுபதியும்,சூர்யாவும் தென்காசியில் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். எனவே இது அவருக்கு நல்ல அறிமுக படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லனாக லிங்கா:

அதையடுத்து வில்லனாக இப்படத்தில் சேதுபதி படத்தில் உதவி ஆய்வாளராக நடித்த லிங்கா நடித்துள்ளார். இதற்காக அவர் தாய்லாந்து சென்று, கடந்த ஒரு வருடமாக கஷ்டப்பட்டு 18 கிலோ எடை கூட்டியுள்ளார். விவேக் பிரசன்னா, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை பொறுப்பை ஜார்ஜ் ஏற்றுள்ளார்

யுவனின் துள்ளலான இசை:

யுவன் ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையில் ஐந்து பாடல்கள் அமைந்துள்ளன. ஐந்தும் ஐந்து விதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின்  மிகப்பெரிய ஹிட் ஆல்பமாக அமையும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. 

படப்பிடிப்பு:

இப்படத்தைத் தென்காசி, மலேசியா, தாய்லாந்து என மூன்று இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. மலேசியா, தாய்லாந்தில் எடுக்கப்பட்ட காட்சிகளின் டப்பிங் வேலைகளுக்காக, இயக்குநர் அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

ரிலீஸ்: 

அதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வேலைகளையும் விறுவிறுப்பாக செயல்பட்டு முடித்து,வரும் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.