×

அப்பா ஆசீர்வாதத்துடன் மூன்றாவது பட டைட்டில்லை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து ஒரு உயரத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராகச் வலம் வந்த இவர் தனது விடாமுயற்சியால் இன்று நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இளைஞர்கள் பலரும் இவரை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு உழைத்து வருகின்றனர். இவரது தயாரிப்பில் வெளியான கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு
 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து ஒரு உயரத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராகச் வலம் வந்த இவர் தனது விடாமுயற்சியால் இன்று நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இளைஞர்கள் பலரும் இவரை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு உழைத்து வருகின்றனர். 

இவரது தயாரிப்பில் வெளியான கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது இவர் தயாரிக்கவுள்ள மூன்றாவது படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘அருவி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கவுள்ள புதிய படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ளார். ‘வாழ்’ என தலைப்பிடப்பட்டுள்ள படத்தின் பரஸ்ட் லுக் போஸ்ட்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில், ‘எனது தந்தையின் பிறந்தநாளான இன்று, அவரது ஆசீர்வாதத்துடன் இப்படத்தின் தலைப்பை அறிவிக்கிறேன். என்னுடைய முந்தைய படங்களைப் போல இந்த படத்திற்கும் அனைவரது அன்பும், ஆதரவையும் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தைப் பற்றிய மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.