×

அபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்த பரவை முனியம்மா

துணிகள், பழங்கள் மற்றும் தேவையான மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்ததுடன், பண உதவியையும் செய்தார். நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா கடந்த சில ஆண்டுகளாக இதய கோளாறு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் போதிய பணவசதி இல்லாததால் மீண்டும் வீட்டிற்கே அழைத்து வரப்பட்டார். இதையடுத்து நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன்
 

துணிகள், பழங்கள் மற்றும் தேவையான மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்ததுடன்,  பண உதவியையும் செய்தார். 

நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை  முனியம்மா கடந்த சில ஆண்டுகளாக இதய கோளாறு மற்றும் நுரையீரல் தொற்று  காரணமாக அவதிப்பட்டு வந்தார்.  கடந்த ஆண்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் போதிய பணவசதி இல்லாததால் மீண்டும் வீட்டிற்கே அழைத்து வரப்பட்டார்.

 

இதையடுத்து  நடிகர் அபி சரவணன் பரவை  முனியம்மாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன்  அவருக்கு துணிகள், பழங்கள் மற்றும் தேவையான மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்ததுடன்,  பண உதவியையும் செய்தார். 

இந்நிலையில் கடந்த வாரம் அபி சரவணன் – வெண்பா நடிப்பில் வெளியான மாயநதி  திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இதையறிந்த பரவை  முனியம்மா மாயநதி படத்தை காண விரும்பியுள்ளார்.

இதையடுத்து   மாயநதி படத்தை அபி சரவணன்  குடும்பத்தினருடன் பரவை  முனியம்மாவும்  சேர்ந்து மதுரையில் பார்த்தார். இதுகுறித்து கூறிய அவர்,  நீண்ட  நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது என்று கூறியதுடன் அபி சரவணனை வெகுவாக பாராட்டியும் உள்ளார்.