×

அந்த ஹீரோவுடன் முத்தக் காட்சியில் நடிக்க தயார்: நடிகை தமன்னா ஓபன் டாக்!

நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்காக மட்டும் முத்தக் காட்சியில் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். சென்னை: நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்காக மட்டும் முத்தக் காட்சியில் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். தமிழ்,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை தமன்னா. இவர் உதயநிதி ஸ்டாலினுடன் இனைந்து நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் கடந்த மாதம் 22ம் வெளியானது. அதையடுத்து ‘தேவி 2’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 

நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்காக மட்டும் முத்தக் காட்சியில் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

சென்னை: நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்காக மட்டும் முத்தக் காட்சியில் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

தமிழ்,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை தமன்னா. இவர் உதயநிதி ஸ்டாலினுடன் இனைந்து நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் கடந்த மாதம் 22ம் வெளியானது. அதையடுத்து ‘தேவி 2’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கிலும் 3,4 திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.

அதையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி புதுப்பட வாய்ப்புகள் வந்த பின் முத்தக் காட்சியில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டு தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனை சந்தித்த நிகழ்வை பற்றி பேசியுள்ளார் அதில் ஆவர் கூறியதாவது, ‘அவரை பார்த்ததும் ஹாய், நான் உங்களின் தீவிர ரசிகை, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தேன். 

அதையடுத்து ரித்திக் ரோஷனை பார்த்த மகிழ்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டுமா என்று அவர் கேட்க, உடனே ஆமாம் என்று கூறினேன் என்கிறார் தமன்னா.நான் படங்களில் முத்தக் காட்சியில் நடிப்பது இல்லை. ஆனால் ரித்திக் ரோஷனாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தோழிகளிடம் ஜோக்கடிப்பேன். அவருடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிப்பேன்’ என்று தமன்னா தெரிவித்துள்ளார். 

அது என்ன தமன்னா ஓரவஞ்சம் என்று பலரும் சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.