×

அந்த பாடலால் என் மனைவியிடம் செருப்பால அடி வாங்கினேன்: இயக்குநர் செல்வராகவன் ஓபன் டாக்!

இயக்குநர் செல்வராகவன் தன் மனைவியிடம் ஒரு பாடலுக்காகச் செருப்பால் அடி வாங்கியுள்ளதாகப் பேட்டியில் கூறியுள்ளார். சென்னை: இயக்குநர் செல்வராகவன் தன் மனைவியிடம் ஒரு பாடலுக்காகச் செருப்பால் அடி வாங்கியுள்ளதாகப் பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பெட்டை போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இவர் தற்போது சூர்யாவை வைத்து NGK படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுயடைந்த
 

இயக்குநர் செல்வராகவன் தன் மனைவியிடம் ஒரு பாடலுக்காகச் செருப்பால் அடி வாங்கியுள்ளதாகப் பேட்டியில் கூறியுள்ளார்.  

சென்னை: இயக்குநர் செல்வராகவன் தன் மனைவியிடம் ஒரு பாடலுக்காகச் செருப்பால் அடி வாங்கியுள்ளதாகப் பேட்டியில் கூறியுள்ளார்.  

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பெட்டை போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இவர் தற்போது சூர்யாவை வைத்து NGK படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுயடைந்த நிலையில், நேற்று படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியானது. 

இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் வார இதழில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் ‘நான் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இடம்பெற்ற என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா பாடலை கேட்டு என் மனைவிக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது.  சும்மா பச்சையாக சொல்லவேண்டும் என்றால் செருப்பாலா அடிச்சா’ என்று கூறியுள்ளார்.

மேலும் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பணப் பிரச்சனை காரணமாக இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.