அந்த நடிகர் என்னுடன் பலமுறை உறவு கொண்டுள்ளார்: உன் மனைவியிடம் சொல்லி புரிய வை; நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட பகீர் தகவல்!
நடிகர் நானி எனக்கு போதைப்பொருள் பயன்படுத்தக் கொடுத்ததோடு, பலமுறை என்னுடன் உறவு கொண்டுள்ளார் என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் நானி எனக்கு போதைப்பொருள் பயன்படுத்தக் கொடுத்ததோடு, பலமுறை என்னுடன் உறவு கொண்டுள்ளார் என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை ஏற்படுத்தினார்.
தற்போது ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, வளசரவாக்கத்தில் குடியேறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பாலியல் வன்கொடுமை குறித்தும், கவர்ச்சி புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ‘நானி நிறைய குடிப்பார். பெண்கள் விஷயத்தில் அவர் ரொம்ப மோசம். அவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஓர் இடம் பிடிக்க போராடிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.எப்போதும் மது, புகை என போதையில் மூழ்கி கிடைக்கும் அவர் என்னையும் பயன்படுத்த சொல்லி வற்புறுத்தினார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, என் வீட்டிலிருந்து கிளம்பும் படியும் எச்சரித்தேன். குறிப்பாக அவர் நடிக்கும் படங்களில் எனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி என்னுடன் பலமுறை உறவு கொண்டுள்ளார். ஆனால் இதையெல்லாம் தெரியாமல் அவரது மனைவி பேசி கொண்டிருக்கிறார். அதனால் நானி அவர் மனைவியிடம் எடுத்து கூறி புரியவைக்க வேண்டும். இல்லையென்றால் படுரகசியமான விஷயங்களை வெளியிட வேண்டியிருக்கும்’ என்றார்.
ஸ்ரீரெட்டியின் இந்த கருத்து மீண்டும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட வாய்ப்புக்காக இது போன்ற அவதூறுகளை ஸ்ரீரெட்டி பரப்பி வருவதாக பலரும் கூறிவருகின்றனர். ஆனால் யார் பெயரை எப்போது அந்த அம்மா இழுத்துவிடுமோ என்று கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் உதறலில் உள்ளனர்.