×

“அடுத்த படம் நாடக காதல் பற்றியது தான்” : இயக்குநர் சண்முகம் முத்துசாமி அறிவிப்பு!

பணிகள் நடந்து முடிந்து இசை வெளியீட்டு விழாவும் நடந்து விட்டது. இருப்பினும் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் அடங்காதே. இதில் ஹீரோவாக ஜிவி பிரகாஷ், சுரபி, மந்த்ரா பேடி, யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீக்ரீன் புரொடக்சன் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் பணிகள் நடந்து முடிந்து இசை வெளியீட்டு விழாவும் நடந்து விட்டது. இருப்பினும் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குநர் சண்முகம் முத்துசாமி தனது அடுத்த
 

பணிகள் நடந்து முடிந்து இசை வெளியீட்டு விழாவும் நடந்து விட்டது. இருப்பினும் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. 

இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் அடங்காதே. இதில் ஹீரோவாக ஜிவி பிரகாஷ்,   சுரபி, மந்த்ரா பேடி, யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீக்ரீன் புரொடக்சன் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் பணிகள் நடந்து முடிந்து இசை வெளியீட்டு விழாவும் நடந்து விட்டது. இருப்பினும் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் இயக்குநர் சண்முகம் முத்துசாமி  தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘வேற வழியில்லை… வெகு விரைவில் நாடகக் காதல் என்ற வார்த்தை ஏன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், ஆணவக் கொலைகள் பற்றிய நடுநிலையான பார்வையோடு ஒரு சினிமா எடுக்கப்படும்’ என்று  பதிவிட்டுள்ளார். 

சாதி சார்ந்த படங்கள் காலம் காலமாக தமிழ் சினிமாவில் ஏதோ  ஒருவகையில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் சமீப காலமாக  சமூகவலைதளம்  காரணமாக இந்த படங்கள் பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.